நான் மரம்!

நீ என்னோடிருந்த காலமட்டும்
என் நிழல்தனை கொடுத்திருந்தேன்
என் வலியதை மறைத்திருந்தேன்.

ஏற்றம் பல நீ காண
                   எட்டி மிதிக்கும் உன் கால்களுக்கு
என் தோள் தந்தேன் ஏணியாக.

என் மீது நீ கல்லெறிந்தாலும்...
               கனிகளை தான் நான் கொடுத்தேன்,
பல கனிகளை தான் கொடுப்பேன்.

அந்த கனிகளிலும்.....
உனக்கு மனமில்லை என்றால்
என்னிடம் கொடுத்துவிடு
என் வேருக்கு உரமாகும்,
பலபேருக்கு மருந்தாகும். 

ஆப்பிள் கனியதை நான் கொடுக்க
நன்மை தீமை அறிந்து கொண்டாய்

சிறு நெல்லிக் கனியதை நான் கொடுத்து
முற்பாதி கசந்தாலும் பிற்ப்பாதி இனிக்க வைத்தேன்

வாழை மரமாக நானிருந்தாலும்
உனை வாழவைக்க
உன்வாசலுக்கு வந்திருந்தேன்.

என்னை வெட்டி சுட்டாலும்                            
நறுமணம் தனை கமழச்செய்தேன்.

நீ இச்சென்மம் முடித்தாலும்
உன்னோடு நான் எரிந்தேன்.
உன் சவம் மூடும் சவப்பெட்டியானேன்.

துறவறம் துறந்த துறவியின் கதை !

                         அது ஒரு மார்கழி மாதம்,
பனிப்பூவும் இரகசியமாய் பூமிக்கிறங்கும் நேரம் . பகலின் களைப்பு நீங்க இரவின் மடியில் மானுடர் தாம் துயில் கொள்ளும் வேளையில் தூங்காது விழித்திருந்தது ஒரு இதயம். அவன் நினைவுகள் செட்டைகளை  விரித்து பறக்க தொடங்கியிருந்தது, இரை  தேடும் பறவை போல் அவனது கேள்விகளுக்கான பதில்களை தேடி அது பறந்து கொண்டிருந்தது, காலச்சக்கரத்தின் பின்னோக்கி.
எங்கேயேனும் ஏதேனும் நிகழ்வுகளில் அதற்க்கான தடயங்கள் தென்படுகிறதா எனத் தேடத்தொடங்கியது. நடந்து முடிந்தவைகளில் எந்த தடயமும் மேலோட்டமாக தென்படுவதாக இல்லை. ஒவ்வொரு நிகழ்வுகளையும்  துருவ ஆரம்பித்தது, சில நிகழ்வுகள் காட்சிகளாக  நினைவலையில் ஓடத்தொடங்கியது.

காட்சி: 1
                    ஏழு வருடம் களித்து  பிறந்தவன் ஆதலால் ராஜகுமாரன் போலவே வளர்க்க ஆரம்பித்தனர். அவனது தந்தையோ அவனுக்கு தங்கபஷ்பம் அரைத்து கொடுத்தார். அவனுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வரப்போவதினால் அவனது தாயானவள் தன் அன்னையிடம் ஏழு வருடம் தவமிருந்து பெற்றெடுத்த தவப்புதல்வனை வளர்க்கும் படி ஒப்படைத்து செல்கிறாள். பாட்டிக்கோ இவன் மீது கொள்ளை பிரியம், இவனுக்கும் தான். அங்கு அவனுக்கு சகல சவுகரியங்களும் கிடைக்கின்றது அன்னையின் அன்பைத்தவிர. 
                                                                                                                                                                                                                                                                                                 (தொடரும்....)
.

எந்திரனாய் மாறத்துணிந்தவன் ^

காற்றாக நீயும் வந்தாய்
கவிதையாலே உனக்கும் ஓர்
உருவம் தந்தேன் - கலைந்தாயே
என் கனவோடு நீயும் !





யாரும்  அறியா  அவ்விடியற்பொழுதில்
யானும் எதிர்பாரா நேரமதில்
அடுக்கடுக்காய் நீ கொடுத்த
அம்முத்தங்கள்- நீயில்லா  இவ்விரவில்
அனலாய் சுடுகின்றனவே !



நிஜம் என நினைத்தவைகள் எல்லாம்
நிழலாக மாறிப்போகும் முன்
நீயாக வந்துவிடு என் நினைவோடு கலந்துவிடு
நீயில்லா வாழ்க்கையும் தான் - என்
நினைப்பில்  கூட இல்லை !


இந்திரனாய் வாழ வந்தவன் -உன்
இதயமதை பார்த்த பின்னர்
எந்திரனாய் மாறத்துணிந்தேன்- என்
ஏக்கமெல்லாம் நீயே தான்
என்செய்வாய் என் தோழி !



.

Blogger Widgets

About Me

எனது புகைப்படம்
என் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதினால் நானும் பிரம்மனே !(I'm the bramma who give life to their dreams).

Blog Archive

Join Hands

தங்களின் வருகைக்கு நன்றி!

அன்புப் பரிசு

அன்புப் பரிசு
நன்றி!! "சைவகொத்துப்பரோட்டா"

நன்றி!! "அன்புடன் ஆனந்தி"

பாதச்சுவடு

Enter your email address:

Delivered by FeedBurner

இயக்குவது Blogger.